2. சோபாலின் மகனான ராயியா யாகாத்தைப் பெற்றார். யாகாத் அகுமாயி, லாத் என்பவர்களைப் பெற்றார். சாராத்தியரின் வம்சங்கள் இவையே.
|
4. பானுவேல் கேதோரின் தந்தை. ஏசேர் ஓசாவின் தந்தை. இவர்கள் அனைவரும் பெத்லெகேமின் தந்தையான எப்பிராத்தாவுக்கு முதல் மகனாகப் பிறந்த கூருடைய புதல்வர்களாம்.
|
6. நாரா அவருக்கு ஊசாம், ஏப்பேர், தேமனி, அகஸ்தரி என்பவர்களைப் பெற்றாள். இவர்களே நாராவின் புதல்வர்கள்.
|
9. யாபேசு தம் சகோதரரை விட அதிகப் புகழ் பெற்றவராய் விளங்கினார். அவருடைய தாய், "நான் துக்கத்தோடு அவனைப் பெற்றேன்" என்று சொல்லி அவருக்கு யாபேசு என்று பெயரிட்டிருந்தாள்.
|
10. யாபேசு இஸ்ராயேலின் கடவுளை நோக்கி, "நீர் என்னை இன்மொழி கூறி ஆசீர்வதித்தருளும்; என் நிலங்களின் எல்லைகளையும் விரிவுபடுத்தியருளும். உமது அருட்கரம் என்னோடு என்றும் இருக்கட்டும்; தீமை என்னை மேற்கொள்ளாதவாறு காத்தருளும்" என்று வேண்டிக்கொண்டார். அவர் கேட்டதைக் கடவுள் அருளினார்.
|
12. இவர் எஸ்தோனைப் பெற்றார். எஸ்தோன் பெத்திராபாவையும் பெசேயையும், நாவாஸ் நகரத்துக்குத் தந்தையாகிய தெகின்னாவையும் பெற்றார். இவர்களே ரெக்கா என்ற ஊரில் வாழும் மனிதர்கள்.
|
13. கெனேசுவின் புதல்வர் ஒத்தோனியேல், சராயியா ஆகியோராவர். ஒத்தோனியேலுக்கு ஆத்தாத், மவொநதி என்ற மக்கள் இருந்தனர்.
|
14. மவொநதி ஒப்ராவைப் பெற்றார். சராயியா தொழிலாளி பள்ளத்தாக்கு என அழைக்கப்பெறும் இடத்தின் தலைவரான யோவாபைப் பெற்றார். ஏனெனில் அவ்விடத்தில் தொழிலாளர்கள் குடியிருந்தனர்.
|
17. எஸ்றாவுடைய புதல்வர்: ஏத்தோர், மேரேத், எப்பேர், யலோன் என்பவர்கள். மறுபடியும் அவன் மரியாம், சம்மாயி என்பவர்களையும், எஸ்தமோவின் தந்தையாகிய எஸ்பாவையும் பெற்றார்.
|
18. மேலும் அவருடைய யூத மனைவி கேதோரின் தந்தையாகிய யரேதையும், செக்கோவின் தந்தையாகிய ஏபேரையும், சனோயேயின் தந்தையாகிய இக்குதியேலையும் பெற்றாள். இவர்களே மெரேத்தின் மனைவியும் பார்வோனின் மகளுமான பெத்தியாவின் புதல்வர்கள்.
|
19. கெயிலாவின் தந்தையாகிய நகாமின் சகோதரியும் ஒதியாவினுடைய மனைவியுமான ஒரு பெண்கார்மி, மக்காத்தியைச் சேர்ந்த எஸ்தாமோ ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.
|
20. சீமோனுடைய புதல்வர்: அம்னோன், ரின்னா, பெனானான், திலோன் என்பவர்கள். எசியுடைய புதல்வரோ சோகேது, பென்சோகேது என்பவர்கள்.
|
21. யூதாவின் மகன் சேலோவுடைய புதல்வர்: லெக்காவின் தந்தையாகிய ஏரும், மரெசாவின் தந்தையாகிய லாதாவும், பெத்தாஷ்பேயாவில் இருந்த சணற் புடவை நெய்யும் வீட்டைச் சேர்ந்த வம்சங்களும், யோவாக்கீமும்,
|
22. கோசேபா ஊரைச் சேர்ந்த மனிதர்களும், மோவாவை ஆண்டபின் லாகே ஊருக்குத் திரும்பியிருந்த யோவாசும் சாராபும் ஆகிய இவர்களேயாம்.
|
23. இவ்வரலாறுகள் மிகவும் பழமையானவை. இப்போது அவர்கள் நெதாயிம், கெதெரா என்ற இடங்களில் குயவர்களாய் வாழ்ந்து வருகின்றனர். அரசனின் வேலையைக் கவனித்து வரும் பொருட்டு அவர்கள், அங்கே குடியேறினர்.
|
26. மஸ்மாவுடைய புதல்வரில் ஒருவர் பெயர் அமுயேல். இவர் சக்கூரைப் பெற்றார்; சக்கூர் செமேயியைப் பெற்றார்.
|
27. செமேயிக்குப் பதினேழு புதல்வரும், ஆறு புதல்வியரும் இருந்தனர். அவருடைய சகோதரர்களுக்கோ பிள்ளைகள் ஒரு சிலரே. அவர்களின் சந்ததி யூதாவின் புதல்வரைப் போலப் பெருகவில்லை.
|
31. பெத்மற்காபொத், அசார்சுசிம், பெத்பெராயி, சாரிம் ஆகிய இடங்களில் குடியிருந்தனர். தாவீது அரசர் காலம் வரை இவையே அவர்களின் நகர்களாய் இருந்தன.
|
33. அவற்றை அடுத்துப் பாகால் வரை இருந்த எல்லாச் சிற்றூர்களும் அவர்களுடையனவே. இவ்விடங்களில் தான் அவர்கள் வாழ்ந்து வாந்தார்கள். அவர்களுக்குரிய தலைமுறை அட்டவணையும் இருந்தது.
|
35. அமாசியாவின் மகன் யோசா, யோவேல், அசியேலின் மகன் சரையாவின் புதல்வன் யோசபியாக்குப் பிறந்த ஏகு, எலியோவெனாயி,
|
37. சமையாவின் புதல்வன் செம்ரியுடைய மகன் இதையாவுக்குப் பிறந்த அல்லோனின் மகன் செப்பையுடைய புதல்வன் சிசா ஆகியோரும்,
|
39. அவர்கள் தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடிக் காதேரின் எல்லையான பள்ளத்தாக்கின் கீழ்புறம் வரை சென்றனர்.
|
40. மிகச் செழிப்பான மேய்ச்சல் நிலங்களைக் கண்டுபிடித்தனர். முன்னர் அங்கு தான் காமின் சந்ததியார் வாழ்ந்து வந்தனர். வளப்பமும் அமைதியும் உடைய பரந்த நாடு அது.
|
41. மேலே சொல்லப்பட்டவர்களோ யூதாவின் அரசர் எசேக்கியாசின் காலத்தில் அங்குச் சென்று அங்கே வாழ்ந்து வந்த மெயீனியரைக் கொன்று போட்டனர்; அவர்களுடைய கூடாரங்களை அழித்து இந்நாள் வரை அவர்களுள் எவரும் அங்கிராதவாறு அவர்களை ஒழித்து விட்டனர். தங்கள் ஆடுகளுக்குத் தேவையான மிகச் செழிப்பான மேய்ச்சல் நிலங்கள் அங்கு இருந்தமையால் அவர்கள் அங்கேயே குடியேறினார்கள்.
|
42. சிமேயோனின் புதல்வராகிய இவர்களில் ஐந்நூறு வீரர் ஏசியின் புதல்வர் பல்தியாஸ், நாரியாஸ், ரப்பையாஸ், ஓசியேல் என்பவர்களைத் தலைவர்களாக கொண்டு, செயீர் மலைக்குச் சென்றனர்.
|
43. அமலேக்கியரில் மீதியாய் எஞ்சி இருந்தவர்களைக் கொன்று விட்டு, அங்கே குடியேறினார்கள். அவர்கள் இன்று வரை அங்கேயே வாழ்ந்து வருகின்றார்கள்.
|